குற்றியலுகரம் : குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம். கு,சு, டு, து,பு, று - எனும் ஆறு வல்லின உகர எழுத்துக்கள் (தனி நெடிலை) சார்ந்து வரும் பொழுதும் பல எழுத்துக்களை சார்ந்து அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். (உ.ம் ) நாடு = 1/2 பாலாறு = 1/2 பண்பாடு = 1/2
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை: நெடில் தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வன் தொடர்க் குற்றியலுகரம், மென் தொடர்க் குற்றியலுகரம், இடைத் தொடர்க் குற்றியலுகரம்.
நெடில் தொடர் குற்றியலுகரம் : உயிர் நெடில், உயிர் மெய் நெட்டெழுத்துக்களை அடுத்து வரும் வல்லின உகர எழுத்துக்கள் நெடில் தொடர் குற்றியலுகரம் எனப்படும். இவை ஈரெழுத்து சொல்லாகவே வரும். (உ.ம் ) நாடு, ஆடு, ஆறு, காசு
உயிர் தொடர் குற்றியலுகரம் : அழகு, பாலாறு, பண்பாடு, அரசு மென்தொடர் குற்றியலுகரம் : குற்றியலுகரச் சொல்லின் ஈறெழுத்துக்கு முன்பாக மெல்லின மெய்யெழுத்துக்களான ங், ஞ், ண், ந், ம், ன் வந்தால் அது மென்தொடர் குற்றியலுகரம். ( உ.ம் ) பந்து, மஞ்சு, சங்கு
இடைத்தொடர் குற்றியலுகரம் : குற்றியலுகர சொல்லின் ஈறெழுத்துக்கு முன்பாக இடையின மெய்யெழுத்துக்களாகிய (ய, ர,ல, வ, ழ, ள) வந்தால் அது இடைத்தொடர் குற்றியலுகரம். ( உ.ம் ) சார்பு, மூழ்கு, கொய்து
வன்தொடர் குற்றியலுகரம் : குற்றியலுகர சொல்லின் ஈற்றெழுத்துக்கு முன்பாக வல்லின மெய் எழுத்துக்களான க், ச், ட், த், ப், ற் வந்தால் அது வன்தொடர் குற்றியலுகரம் எனப்படும். (உ.ம் ) பட்டு, பத்து, எட்டு, பாராட்டு.
ஆய்த தொடர் குற்றியலுகரம் : வல்லின உகர எழுத்தானது ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் அது ஆய்த தொடர் குற்றியலுகரம் எனப்படும். ( உ.ம் ) காசு, விறகு, பங்கு, எட்டு, அஃது.
குற்றியலிகரம் : நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து வரும் மொழி யகரம் வருகையில் நிலைமொழி உகரம் இகரமாக திரிந்து தனக்குரிய ஒருமாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம். ( உ.ம்) வண்டு+ யாது வீடு = யாது
முற்றியலுகரம் : தனிக்குறிலை அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரமும். பொதுவாக சொல்லின் இறுதியில் வரும் மெல்லின உகரமும், இடையின உகரமும் முற்றியலுகரம் எனப்படும். ( உ.ம்) நடு,பசு, மது, பொது , உண்ணு, கதவு.
ஐகாரக் குறுக்கம் : ஐ எழுத்து தனித்து ஒலிக்கும் போது இரண்டு மாத்திரை ஒலியில் கொண்டது. இது மற்ற எழுத்துக்களுடன் கூடி வரும்பொழுது தனது 2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதற்கு ஐகாரக் குறுக்கம் என்று பெயர். ( உ.ம் ) ஐ - 2 மாத்திரை, ஐப்பசி - 1 1/2 மாத்திரை, வளையல் - 1 மாத்திரை, தலை - 1 மாத்திரை.
ஒளகாரக் குறுக்கம் : ஒள எழுத்து தனித்து வரும் பொழுது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும். பிற எழுத்துக்களுடன் வரும்பொழுது தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் அதற்கு ஒளகார குறுக்கம் என்று பெயர். ( உ.ம் ) ஔவை, ஔவியம், ஔசிதம், மௌவல், வௌவால். மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்துள்ள 'ஔ' தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒரு மாத்திரையளவே ஒலிப்பதைக் காணலாம். மேலும் ஒளகாரக் குறுக்கம் மொழிக்கு இடையிலும், இறுதியிலும் வராது.
மகரக் குறுக்கம் : ம் என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து 1/4 மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும். ணகர , னகர மெய்களின் பின் உள்ள மகரம் 1/2 மாத்திரையிலிருந்து குறைந்து 1/4 மாத்திரையளவே ஒலிக்கும். ( உ.ம்) மருண்ம், சென்ம். தரும் வளவன், வரும் வண்டி - இத்தொடரில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகரம் வந்து வகர முதல் மொழியோடு புணர்கிறது. இவ்வாறு வரும்பொழுது நிலைமொழி ஈற்றில் உள்ள மகரம் 1/4 மாத்திரை அளவே ஒலிக்கும்.
ஆய்தக் குறுக்கம் : ஆய்த எழுத்து தனக்குரிய 1/2 மாத்திரை யிலிருந்த 1/4 மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆகும். ( உ.ம்) முள் + தீது = முஃடீது. மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின் கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதைக் காணலாம்.